உலகப் போட்டிகளில் வெல்வதே லட்சியம்!
'கராத்தே, நடனப் போட்டிகளில் உலக அளவில் வென்று சாதனைகளைப் படைப்பதையே லட்சியமாகக் கொண்டுள்ளேன்' என்கிறார் மோ.ரோஷன்.
'கராத்தே, நடனப் போட்டிகளில் உலக அளவில் வென்று சாதனைகளைப் படைப்பதையே லட்சியமாகக் கொண்டுள்ளேன்' என்கிறார் மோ.ரோஷன்.
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட வந்தவாசி அருகேயுள்ள கீழ்க்கொடுங்காலூர்
கிராமத்தைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் கே.மோகன் - சுதா தம்பதியின் மகன் மோ.ரோஷன். இவர் கடைசிகுளத்தில் உள்ளசுவாமி அபேனநந்தா
Advertisement
வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார்.
கராத்தே போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளைப் பெற்றுவரும் அவரிடம் பேசியபோது:
'சிறுவயதிலேயே கராத்தே பயிற்சியில் சேர்ந்தேன். கரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டபோதும், நேரத்தை வீணாக்காமல் கராத்தே பயிற்சிகளை மேற்கொண்டேன். மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.
திண்டிவனத்தில் அண்மையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான ஹிக்வானா ஹிட்டோரியோ கராத்தே போட்டியில் முதலிடத்தைப் பெற்று, ஓய்வுபெற்ற ஏ.டி.எஸ்.பி. ஜவஹர்லாலிடம் பரிசு பெற்றேன்.
தொடர்ந்து கராத்தே பயிற்சி பெற்று, பிளாக் பெல்ட் பெற விரும்புகிறேன். கராத்தே போட்டிகளில் பெரிய அளவில் சாதனை படைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் நடனத்திலும் ஆர்வம்
உள்ளதால், அந்தப் பயிற்சியையும் மேற்கொள்கிறேன். எதிர்காலத்தில் மென்பொருள், செயற்கை நுண்ணறிவுத் துறைகளில் படித்து, சாதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்' என்கிறார் ரோஷன்.