முகப்பு
மகளிர்மணி

நன்னாரி லெமன் சர்பத் 

எலுமிச்சையைப் பிழிந்து சாறெடுத்து தண்ணீருடன் சேர்க்கவும். சர்க்கரை, உப்பு சேர்த்து நன்கு கரைத்து வடிக் கட்டவும். அதில் நன்னாரி எசன்ûஸ சேர்த்து ப்ரஷ் புதினா இலையைச் சேர்த்து ஃப்ரிட்ஜில் 3 மணிநேரம் வைக்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

தேவையானவை:

தண்ணீர் - 5 டம்ளர்
நன்னாரி எசன்ஸ் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
எலுமிச்சை  - இரண்டு பழம் 
உப்பு - 1 சிட்டிகை 
புதினா -  அலங்கரிக்க

செய்முறை:  

எலுமிச்சையைப் பிழிந்து சாறெடுத்து தண்ணீருடன் சேர்க்கவும். சர்க்கரை, உப்பு சேர்த்து நன்கு கரைத்து வடிக் கட்டவும். அதில் நன்னாரி எசன்ûஸ சேர்த்து ப்ரஷ் புதினா இலையைச் சேர்த்து ஃப்ரிட்ஜில் 3 மணிநேரம் வைக்கவும். புதினா மணம் நன்னாரி சர்பத்தில் இறங்கி குடிக்க இதமாக இருக்கும்.  உடனே குடிப்பதாக இருந்தால் 10 ஐஸ் கட்டிகளைச் சேர்த்து தண்ணீருடன் மிக்ஸியில் எலுமிச்சை, சர்க்கரை, உப்பு, நான்கு புதினா இலைகள் சேர்த்து ஓடவிட்டு வடிகட்டி நன்னாரி எசன்ஸ் கலந்து பருகவும். கோடைக்கேற்ற குளு குளு பானம் தயார்.

முழு கட்டுரையைப் படிக்க →