முகப்பு
மகளிர்மணி

ஜீரா போளி

ரவையை தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து, சிறிது நெய் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

Updated On : 7 மார்ச், 2026 at 6:30 PM
ஜீரா போளி
பகிர்:

தேவையான பொருள்கள்:

ரவை, சர்க்கரை - தலா 400 கிராம்

ஏலக்காய்- 3

குங்குமப்பூ -ஒரு சிட்டிகை

நெய்- தேவையான அளவு

உப்பு -சிறிதளவு

செய்முறை:

ரவையை தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து, சிறிது நெய் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு சிறு சிறு உருண்டைகளாக்கி அதை அப்பளம் போல் இடவேண்டும். ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேவையான தண்ணீர்விட்டுச் சூடானதும், சர்க்கரையைப் போட்டு கம்பி பாகாகக் காய்ச்ச வேண்டும்.

அதில் ஏலக்காயை பொடி செய்து போட்டு குங்குமப்பூவையும் சேர்க்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் அப்பளங்களாக இட்ட பூரியை அதில் போட்டு பொரித்தெடுத்து சூட்டோடு ஜீராவில் தோய்த்து சிறிது நேரம் ஊற வைத்து வேறு ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →