முகப்பு
மகளிர்மணி

வீட்டுக் குறிப்புகள்

உணவுக்கு நறுமணம் ஊட்டுவதற்காக, கறிவேப்பிலையைச் சேர்ப்பார்கள்.

Updated On : 10 மே 2026, 4:00 am IST
கறிவேப்பிலை
பகிர்:

உணவுக்கு நறுமணம் ஊட்டுவதற்காக, கறிவேப்பிலையைச் சேர்ப்பார்கள். இதை சுட்ட புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து துவையல் செய்யலாம். இதை உணவுடன் உட்கொண்டால், ருசியின்மை, வயிற்றோட்டம், பித்த வாந்தி, உணவு செரியாமை, பித்த நோய்கள் போன்றவை குணமாகும். குடலுக்கும் பலத்தை அளிக்கும்.

கருப்பு உளுந்தில் தோசை மாவைப் புளிக்க வைக்கும் பாக்டீரியா அதிகமாகவும், தோல் நீக்கிய வெள்ளை உளுந்தில் குறைவாகவும் உள்ளது. இதனால் மாவு புளிப்பதில் வேறுபாடு ஏற்படுகிறது. எனவே, தோலோடுகூடிய உளுந்தையே ஊறவைத்து தோல் நீக்கிப் பயன்படுத்தினால் இட்லி பூ போன்று இருக்கும்.

அகத்திக் கீரையில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. இதனை அருந்தினால் குடல் புண், அரிப்பு, சொறி, சிரங்கு உள்ளிட்ட தோல் நோய்கள் குணமாகும். அகத்திக் கீரையை பச்சையாக மென்று சாற்றை உட்கொண்டால், தொண்டை நோய்கள் நீங்கும். உணவு செரிமானமாக அகத்திக் கீரை உதவும்.

Advertisement

அலர்ஜி உள்ளவர்கள் முலாம்பழம், ஆரஞ்சு சாப்பிடக்கூடாது. மூட்டு வலி உள்ளவர்கள் சப்போட்டா பழத்தைச் சாப்பிடக்கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.