சிறுவர் பாடல்: கோடை
கோடை காலம் வந்தது கொடிய வெப்பம் தந்தது ஆடை களைந்த போதிலும் ஆளை நனைக்கும் வியர்வையே! ஓடை போல கானலும் ஓடும் நீரைப் போலவே தாரை உருக்கிப் போகுதே தரையில் நடக்க இயலுமோ! மேடை போட்ட பசுமையாய் மெலிந்து வளர்ந்த
கோடை காலம் வந்தது
கொடிய வெப்பம் தந்தது
ஆடை களைந்த போதிலும்
Advertisement
Advertisement
ஆளை நனைக்கும் வியர்வையே!
ஓடை போல கானலும்
ஓடும் நீரைப் போலவே
தாரை உருக்கிப் போகுதே
தரையில் நடக்க இயலுமோ!
மேடை போட்ட பசுமையாய்
மெலிந்து வளர்ந்த புல்வெளி
மேலை வெப்பம் தீய்த்ததே
மேலும் வறட்சி காய்த்ததே!
கூடை நிறைய பூக்களும்
குளிர்ந்து மகிழும் மழையதும்
கூடி வந்து சேருமோ
கோடை கொடுமை மாறுமோ?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.