முகப்பு
சிறுவர்மணி

விழித்தெழு!

மழைக்கு ஏங்கிக் கிடக்காதே - நீமரத்தை நட்டால்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:42 AM
பகிர்:

 மழைக்கு ஏங்கிக் கிடக்காதே - நீ
 மரத்தை நட்டால்
 அது போதும்!
 
 மலையைக் கண்டு திகைக்காதே - சிறு
 உளியை எடுத்திடு
 அது போதும்!
 
 மடமை கண்டு மலைக்காதே - உன்
 கடமை செய்திடு
 அது போதும்!
 
 முள்ளைப் பகையாய் நினைக்காதே - அது
 வேலி ஆனால்
 அது போதும்!
 
 கல்லைக் கண்டு கலங்காதே - அதை
 சிலையாய் வடித்திடு
 அது போதும்!
 
 சொல்லைப் பேசிக் கிடக்காதே - நீ
 செயலாய் மாற்றிடு
 அது போதும்!
 
 நெருப்பைக் கண்டு நெகிழாதே -அதில்
 சோறு சமைத்திடு
 அது போதும்!
 
 காரிருள் கண்டு மிரளாதே - செங்
 கதிராய் எழுந்திடு
 அது போதும்!
 
 எதனைக் கண்டும் ஏங்காதே - விழித்
 தெழுந்து செயல்படு
 அது போதும்!
 

 
 
 

முழு கட்டுரையைப் படிக்க →