விழித்தெழு!
மழைக்கு ஏங்கிக் கிடக்காதே - நீமரத்தை நட்டால்
மழைக்கு ஏங்கிக் கிடக்காதே - நீ
மரத்தை நட்டால்
அது போதும்!
மலையைக் கண்டு திகைக்காதே - சிறு
உளியை எடுத்திடு
அது போதும்!
மடமை கண்டு மலைக்காதே - உன்
கடமை செய்திடு
அது போதும்!
முள்ளைப் பகையாய் நினைக்காதே - அது
வேலி ஆனால்
அது போதும்!
கல்லைக் கண்டு கலங்காதே - அதை
சிலையாய் வடித்திடு
அது போதும்!
சொல்லைப் பேசிக் கிடக்காதே - நீ
செயலாய் மாற்றிடு
அது போதும்!
நெருப்பைக் கண்டு நெகிழாதே -அதில்
சோறு சமைத்திடு
அது போதும்!
காரிருள் கண்டு மிரளாதே - செங்
கதிராய் எழுந்திடு
அது போதும்!
எதனைக் கண்டும் ஏங்காதே - விழித்
தெழுந்து செயல்படு
அது போதும்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.