மறைத்து வைக்காதீர்கள்!
எதிரிலேயே இறக்கும் நாளும், வெறுக்கத் தக்க முதுமையும் உள்ளன. அவை அல்லாமல் வலிமையை ஒழிக்கும் நோய்களும் உண்டாகின்றன. ஆதலால் பொருள் உள்ள காலத்தில் மேலும் அதைச் சேர்க்க நான்கு புறமும் ஓடி அலையாதீர். பொருளை இறுகப் பிடித்துக் கொண்டிருக்காதீர்கள். பலருக்கும் பகிர்ந்து கொடுத்து உண்ணுங்கள். சிறிதும் மறைத்து வைக்காதீர்கள்.