விஷ்ணு சகஸ்ரநாமம்
விஷ்ணு சகஸ்ரநாமத்தின் உயர்வு பற்றி முக்கூர் லக்ஷ்மி நரசிம்மச்சாரியார் கூறியதைப்பற்றி நாடோடியின் தகவல்:-
விஷ்ணு சகஸ்ரநாமத்தின் உயர்வு பற்றி முக்கூர் லக்ஷ்மி நரசிம்மச்சாரியார் கூறியதைப்பற்றி நாடோடியின் தகவல்:-
தர்மங்களைப்பற்றி கூறும் மகாபாரதத்தின் சாரம் விஷ்ணு சகஸ்ர நாமம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லிய கீதையைவிட அவருடைய பக்தர் பீஷ்மர் சொல்லியது விஷ்ணு சகஸ்ரநாமம். இதை இயற்றியவர் வியாசர். விஷ்ணுதான் வியாசர். விஷ்ணு சகஸ்ரநாமத்தைச் சொன்னவர் பீஷ்மர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தருமரை பீஷ்மரிடம் தர்மத்தைப்பற்றி கேட்கச் சொல்கிறார். சகல தர்மங்களையும் அறிந்த பீஷ்மர், அம்புப் படுக்கையில் உலக நன்மைக்காக விஷ்ணு சகஸ்ரநாமம் உபதேசிக்கிறார். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதால் வியாதிகள் குணமாகி மன அமைதி கிடைக்கிறது. மேலும், பகவத் கீதைக்கு ஒப்பான விஷ்ணு சகஸ்ரநாமம், புரிந்து கொள்வதற்கும், பாராயணம் செய்வதற்கும் எளிதாக அமைந்திருக்கிறது. தனியாகவோ பலர் சேர்ந்தோ சொல்லலாம்.