வெள்ளை மாளிகையில் தீ
அமெரிக்க அதிபர் மாளிகையில் கரும்புகை எழுந்ததைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்க அதிபர் மாளிகையில் கரும்புகை எழுந்ததைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் மேற்குப்பகுதியில் சனிக்கிழமை காலையில் திடீரென்று கரும்புகை வெளிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, எச்சரிக்கை மணி ஒலித்தது. உஷாரான பாதுகாப்பு அதிகாரிகள், அப்பகுதியில் இருந்த நிருபர்களையும், புகைப்படக் கலைஞர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். இதனிடையே, அங்குள்ள மின்மாற்றி சாதனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே புகை வந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டது என்று அதிபர் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெள்ளை மாளிகையின் மேற்குப் பகுதிக்கு மின்சார சப்ளை மீண்டும் அளிக்கப்பட்டதாகவும், அதிபர் குடும்பத்தாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.