மலேசியா வாழ் இந்தியர் சுட்டுக் கொலை
மலேசியா வாழ் இந்திய தொழிலதிபரான எம்.நாகேந்திரன் (30) மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM
மலேசியா வாழ் இந்திய தொழிலதிபரான எம்.நாகேந்திரன் (30) மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவர், அலோர் சேதார் நகரில் உள்ள தனது வீட்டில், வெள்ளிக்கிழமை துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார். இது குறித்து அவரது வீட்டின் அருகே குடியிருப்போர் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றினர். நாகேந்திரனின் உடலில் குண்டுகளால் சுடப்பட்ட காயம் இருந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.