முகப்பு
உலகம்

மாலத்தீவிடம் ரூ.7,700 கோடி நஷ்ட ஈடு கேட்கிறது ஜிஎம்ஆர்

விமான நிலைய கட்டுமானம், பராமரிப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்த மாலத்தீவு அரசிடம் ரூ.7,700 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளது இந்திய கட்டுமான நிறுவனமான ஜிஎம்ஆர்.

Updated On : 21 ஜூன், 2013 at 11:22 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:13 PM

விமான நிலைய கட்டுமானம், பராமரிப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்த மாலத்தீவு அரசிடம் ரூ.7,700 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளது இந்திய கட்டுமான நிறுவனமான ஜிஎம்ஆர்.

இது தொடர்பான மனு, சிங்கப்பூர் நீதிமன்றத் தீர்ப்பாயத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. தங்கள் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட 25 ஆண்டுகால ஒப்பந்தத்தை தவறான முறையில் மாலத்தீவு அரசு ரத்து செய்துவிட்டதாகவும் ஜிஎம்ஆர் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை நம்பி தாங்கள் மேற்கொண்ட செலவுகள், பிற நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம், அதற்கு அளிக்க வேண்டிய நஷ்டஈடு என தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக சுமார் 75 பக்க அறிக்கையை நீதிமன்றத் தீர்ப்பாயத்தில் ஜிஎம்ஆர் தாக்கல் செய்துள்ளது.

Advertisement

மாலத்தீவு அதிபராக முகமது நஷீத் பதவி வகித்தபோது, மாலேயில் உள்ள சர்வதேச விமான நிலைய கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்தை ஜிஎம்ஆர் பெற்றது. ஆனால் முகமது வாஹித் மாலத்தீவு அதிபரான பின் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.