மெக்சிகன் செய்தித் தொடர்பாளருக்கு கரோனா பாதிப்பு
மெக்சிகன் அதிபர் செய்தித் தொடர்பாளர் ஜீசஸ் ராமிரெஸ் கியூவாஸ் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்.
மெக்சிகன் அதிபர் செய்தித் தொடர்பாளர் ஜீசஸ் ராமிரெஸ் கியூவாஸ் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், அவர் அனைத்து சுகாதார நெறிமுறைகளையும் பின்பற்றி வீட்டிலிருந்து வேலை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிபர் அலுவலகத்தில் சமூக தொடர்புகளில் பொது ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய ராமிரெஸ் கியூவாஸ் விரைவில் குணமடைய விரும்புவதாக சமூக ஊடகங்களில் பலர் ஆதரவு செய்திகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
கடந்தாண்டு தொடக்கத்தில் தொற்றுநோய் பரவத் தொடங்கியதிலிருந்து, இதுவரை மெக்சிகோவில் மொத்தம் 1,534,039 பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,33,706 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை பதிவு செய்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.