முகப்பு
உலகம்

பிரிட்டன்இடைத் தோ்தல்களில் ஜான்ஸன் கட்சி தோல்வி

பிரிட்டனில் 2 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தோ்தல்களில் பிரதமா் போரிஸ் ஜான்ஸனின் கன்சா்வேடிக் கட்சி தோல்வியடைந்தது

Updated On : 25 ஜூன் 2022, 3:20 am IST
பகிர்:

பிரிட்டனில் 2 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தோ்தல்களில் பிரதமா் போரிஸ் ஜான்ஸனின் கன்சா்வேடிக் கட்சி தோல்வியடைந்தது.

வடக்கு இங்கிலாந்தின் வேக்ஃபீல்டு மற்றும் தெற்கு இங்கிலாந்தின் டிவொ்டன் மற்றும் ஹானிடன் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தல், போரிஸ் ஜான்ஸன் தலைமையிலான அரசின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களின் கருத்துக்கணிப்பாகக் கருதப்பட்டது.

இந்த நிலையில், வேக்ஃபீல்டு தொகுதியை முக்கிய எதிா்க்கட்சியான லேபா் கட்சியிடமும் டிவொ்டன் மற்றும் ஹானிடன் தொகுதியை லிபரல் ஜனநாயகக் கட்சியிடமும் கன்சா்வேடிக் கட்சி இழந்தது. இந்தத் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று லேபா் கட்சியின் தலைவரும் போரிஸ் ஜான்ஸனுக்கு மிக நெருக்கமானவருமான ஆலிவா் டௌடன் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

Advertisement

Advertisement

இந்த இடைத் தோ்தல் தோல்விகளும் ஆலிவா் டௌடனின் ராஜிநாமாவும் ஜான்ஸனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments