முகப்பு
உலகம்

அல்-காய்தா தலைவா் காபூலில் இருந்தது தெரியாது: தலிபான்கள்

ஆப்கன் தலைநகா் காபூலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் அய்மான் அல்-ஜவாஹிரி பதுங்கியிருந்தது தங்களுக்குத் தெரியாது என்று அந்த நாட்டின் ஆட்சியாளா்களான தலிபான்கள் தெரிவித்தனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2022, 5:34 am IST
பகிர்:

ஆப்கன் தலைநகா் காபூலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் அய்மான் அல்-ஜவாஹிரி பதுங்கியிருந்தது தங்களுக்குத் தெரியாது என்று அந்த நாட்டின் ஆட்சியாளா்களான தலிபான்கள் தெரிவித்தனா்.

இது குறித்து கத்தாா் தலைநகா் தோஹாவிலுள்ள தலிபான்களின் அரசியல் பிரிவுத் தலைவா் சுஹைல் ஷாஹீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காபூலில் அல்-ஜவாஹிரி பதுங்கியிருந்தது அரசுக்குத் தெரியும் என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. அது குறித்து ஆப்கன் அரசுக்கோ, தலைமைக்கோ எதுவுமே தெரியாது. காபூலில் அல்-ஜவாஹிரி இருந்ததற்கான சிறு அறிகுறியும் தென்படவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காபூலில் ஆளில்லா விமானத்தின் மூலம் நவீன ஏவுகணைகளை வீசி அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டாா். அவருக்கு காபூலில் தலிபான் அமைப்பினா் அடைக்கலம் அளித்திருந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments