முகப்பு
உலகம்

வறுமையால் மார்வல் படங்களை இயக்கினேன் : பிரபல ஹாலிவுட் இயக்குநர்!

மார்வல் திரைப்படங்களை வறுமையின் காரணமாகவே எடுக்க ஒத்துக்கொண்டதாகவும் 'தோர் காமிக்ஸ்' தனக்குப் பிடிக்காது எனவும் பிரபல ஹாலிவுட் இயக்குநர் தெரிவித்துள்ளார். 

Updated On : 29 நவம்பர் 2023, 4:49 pm IST
பகிர்:


பிரபல ஹாலிவுட் நடிகரும் இயக்குநருமான டைகா வைட்டிடி (Taika Waititi) 'மார்வல் படங்களை இயக்க நான் ஒருபோதும் ஆர்வம் காட்டியதில்லை. வறுமையின் காரணமாகத்தான் அந்தப் படங்களை எடுக்க ஒத்துக்கொண்டேன்' என நகைச்சுவை வலையொலி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஜோ ஜோ ராபிட், தோர்: ராக்னராக், தோர்: லவ் அண்டு தண்டர் போன்ற பிரபலமான திரைப்படங்களை இயக்கியவர் டைகா வைட்டிடி. 'தோர்' திரைப்படத்தின் மூலம் மார்வலுடன் அறிமுகமானார். வலையொலி ஒன்றில் பேசிய அவர் 'எனக்கு சிறுவயதிலிருந்தே தோர் காமிக்ஸ் பிடித்ததில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: காதல் தி கோர் வசூல் எவ்வளவு?

Advertisement

Advertisement

மேலும் 'மார்வல் நிறுவனம், தோர் திரைப்படத்திற்காக என்னை அனுகியபோது, இந்தப் படத்தை வேறு யாரும் எடுக்க முன்வரவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். அப்போதுதான் எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்தது. வறுமையில் இருந்தேன். எனவே இது என் குழந்தைகளை நல்லபடியாக வளர்க்கச் சரியான வாய்ப்பாக இருக்கும் எனப் படத்தை எடுக்க ஒத்துக்கொண்டேன்' எனக் கூறியுள்ளார். 

இதற்கு மேல் மார்வல் படங்களை இயக்க எந்த திட்டமும் இல்லை எனவும் அடுத்த தோர் படத்திற்கு வேறு இயக்குநரைத் தேர்வு செய்தாலும் நான் கவலைப்பட மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் 'எனக்கு மார்வல் நிறுவனத்தை மிகவும் பிடிக்கும். அவர்களது அனைத்து படங்களும் வெற்றியைத் தர வேண்டும் என விரும்புகிறேன்' எனவும் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments