குறைந்த திரெட்ஸின் பயன்பாடு! ட்விட்டரைப் பாதித்ததா?
தொடக்கத்தில் அதிக பயனர்களைப் பெற்ற மெட்டாவின் திரெட்ஸ் பயன்பாடு தற்போது குறைந்து வருவதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.
தொடக்கத்தில் அதிக பயனர்களைப் பெற்ற மெட்டாவின் திரெட்ஸ் பயன்பாடு தற்போது குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, ட்விட்டருக்குப் போட்டியாக 'திரெட்ஸ்' என்ற செயலியை ஜூலை 6 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகமான இரண்டு நாள்களில் 7 கோடி பேர் அதில் இணைந்தனர். 5 நாள்களில் திரெட்ஸில் இணைந்துள்ள பயனர்களின் எண்ணிக்கை 10 கோடியாக அதிகரித்தது. தற்போதைய நிலவரப்படி திரெட்ஸில் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 15 கோடிக்கும் மேல்.
பிற சமூக வலைத்தளங்களை ஒப்பிடுகையில் திரெட்ஸ் மிக வேகமாக இவ்வளவு பயனர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது எனலாம்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | மணிப்பூரில் நடப்பது என்ன?
ஆனால், அதன் பயன்பாட்டை பொருத்தவரையில் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செயலி நுண்ணறிவு நிறுவனமான சென்சார் டவர்ஸ், கடந்த ஜூலை 18-22 நாள்களில் திரெட்ஸின் பயன்பாடு மிகவும் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
செயலி தொடங்கப்பட்ட ஜூலை 6 ஆம் தேதி ஒப்பிடுகையில் ஜூலை 18ல் திரெட்ஸில் தினசரி பயன்பாட்டு சராசரி நேரம் மற்றும் பயனர்களின் எண்ணிக்கை 75%க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.
அதுபோல முதல் நாளை(ஜூலை 7) ஒப்பிடுகையில் ஜூலை 18ல் பதிவிறக்கமும் 22% குறைந்துள்ளது.
நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, திரெட்ஸில் ஜூலை 18 நிலவரப்படி 9.5 கோடி பயனர்கள் அதனை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதில் இந்தியா -28%, அமெரிக்கா - 13%, பிரேசில் -13%, மெக்சிகோ -5%, ஜப்பான் - 4%. அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட 5 நாடுகள் இவை. திரெட்ஸ் 100 நாடுகளில் ஆப்பிள், கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் திரெட்ஸ் செயலின் அறிமுகம் ட்விட்டரில் பயன்பாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, மாறாக ட்விட்டரின் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவே இந்த ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.