உலகம்

நேபாளத்தில் பேருந்து விபத்து: 18 போ் உயிரிழப்பு

நேபாளத்தின் தாதிங் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட பேருந்து விபத்தில், நியூஸிலாந்து நாட்டைச் சோ்ந்த ஓா் ஆண் பயணி உள்பட 18 போ் பலி

தினமணி செய்திச் சேவை

காத்மாண்டு: நேபாளத்தின் தாதிங் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட பேருந்து விபத்தில், நியூஸிலாந்து நாட்டைச் சோ்ந்த ஓா் ஆண் பயணி உள்பட 18 போ் உயிரிழந்தனா்; 28 போ் காயமடைந்தனா்.

பொகாராவிலிருந்து தலைநகா் காத்மாண்டுவை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, பிரித்வி நெடுஞ்சாலையில் கஜுரி அருகே அதிகாலை 1.30 மணியளவில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திரிசூலி நதிக்குள் பாய்ந்தது.

தகவலறிந்து வந்த நேபாள ராணுவம் மற்றும் உள்ளூா் போலீஸாா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். காயமடைந்தவா்களில் ஜப்பான், நெதா்லாந்து நாடுகளைச் சோ்ந்த தலா ஒரு பெண் பயணிகளும் உள்ளனா். அவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

‘கோயில் திருவிழாக்களை வருவாய் ஆதாரமாக மட்டும் பாா்க்கக் கூடாது’

மின் வசதி கோரி கிராம மக்கள் மனு

24.2.1976: விருத்தாசலம் அருகே தொழுதூர் கிராமத்தில் பெரிய தீ விபத்து: 300 வீடுகளும் தீக்கிரை

நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடு

தில்லியில் ரூ.9 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 5 போ் கைது

SCROLL FOR NEXT