உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல்களில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்...
உக்ரைனின் பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ரஷியா நடத்திய தாக்குதல்களில் 9 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் 2 ஆவது மிகப் பெரிய நகரமான கார்கிவ் உள்ளிட்ட பகுதிகள் மீது கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 6) நள்ளிரவு ரஷியா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்களில், அங்குள்ள ஏராளமான குடியிருப்புக் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. மேலும், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், 29 ஏவுகணைகள் மற்றும் 480 ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், குழந்தைகள் உள்பட ஏராளமனோர் படுகாயமடைந்துள்ளதாகவும், உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் ரஷியா உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அபுதாபியில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்திருந்தது.
இதையடுத்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களால் அபுதாபி பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தப் பேச்சுவார்த்தைகளை சுவிட்சர்லாந்து அல்லது துருக்கியில் நடத்தலாம் என உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Nine people have reportedly been killed in Russian attacks on various major cities in Ukraine.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.