உக்ரைனில் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷியா தாக்குதல்!
ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை 3-ஆவது முறையாகப் பயன்படுத்திய ரஷியா!
கீவ் : உக்ரைனில் சக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ஞாயிற்றுக்கிழமை (மே 24) வான் வழி தாக்குதல்களை நடத்திய ரஷியா, சக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஆரேஷ்நிக் பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதல்களில் இருவர் பலியானதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 4 ஆண்டுகளாக நீடிக்கும் உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் சண்டையில் இத்தகைய சக்திவாய்ந்த ஆயுதம் மூன்றாவது முறையாகப் பயன்படுத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
summary