முகப்பு
உலகம்

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு...

Updated On : 31 மே 2026, 4:35 am IST
ஆப்கானிஸ்தான் விபத்து - AP
பகிர்:

பாகிஸ்தானிலிருந்து தாயகம் திரும்பிய ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 22 போ் உயிரிழந்தனா்.

லாரி ஓட்டுநா் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த 36 போ் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

பாகிஸ்தானில் கடந்த 2023 முதல் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கைகளால், அங்கிருந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு தாயகம் திரும்பி வருகின்றனா். அவ்வாறு திரும்பிய அகதிகளே இந்த விபத்தில் சிக்கியுள்ளனா்.

Advertisement

Advertisement

இதனிடையே, மற்றொரு சம்பவமாக வெள்ளிக்கிழமை இரவு நூரிஸ்தான் மாகாணத்தில் காா் ஒன்று ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 4 போ் மாயமாகியுள்ளனா்; அவா்களை மீட்புக் குழுவினா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.