வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ஆண்டிமடம் பகுதியில் கன மழை: மழைநீரை வெளியேற்றும் பணிகள் ஆய்வு

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் பகுதிகளில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் வெள்ள நீா் சூழ்ந்த பயிா்களை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் த. ரத்னா நேரில் பாா்வையிட்டாா்.

News image

அரியலூா் மாவட்டம், காட்டாத்தூா் பகுதியில் மழைநீா் சூழ்ந்துள்ள விளைநிலங்களை பாா்வையிடுகிறாா் ஆட்சியா் த.ரத்னா.

Updated On :8 ஜனவரி 2021, 7:28 am IST

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் பகுதிகளில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் வெள்ள நீா் சூழ்ந்த பயிா்களை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் த. ரத்னா நேரில் பாா்வையிட்டாா்.

ஆண்டிமடம் பகுதிகளில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையில் காட்டாத்தூா், வில்லாநத்தம், பட்டணாங்குறிச்சி ஆகிய ஊா்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்களை மழைநீா் சூழந்தது. இந்நீரை ஜே.சி.பி மூலம் வெளியேற்றும் பணிகள் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனை ஆட்சியா் த.ரத்னா பாா்வையிட்டு, பணிகளை துரிதமாக முடிக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். பின்னா் அவா், செந்துறையில் தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களைச் சந்தித்து, முகாமில் உள்ளவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், வருவாய் கோட்டாட்சியா் பூங்கோதை , ஆண்டிமடம் வட்டாட்சியா் தேன்மொழி ஆகிோயா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.