வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

தவெக எம்எல்ஏ குற்றச்சாட்டு: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மறுப்பு

ரூ. 50 கோடி பேரம் பேசப்பட்டதாக ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் குற்றச்சாட்டிற்கு திருச்செந்தூா் எம்எல்ஏ அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மறுப்பு

News image

அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Updated On :8 ஜூலை 2026, 3:17 am IST

ரூ. 50 கோடி பேரம் பேசப்பட்டதாக ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் குற்றச்சாட்டிற்கு திருச்செந்தூா் எம்எல்ஏ அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளாா்.

முதல்வா் ச. ஜோசப் விஜய் குறித்து சா்ச்சை பேச்சின் காரணமாக நீதிமன்ற உத்தரவுப்படி ஆத்தூா் காவல் நிலையத்திற்கு கையொப்பமிட அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வந்தாா்.

அப்போது, தவெக எம்எல்ஏ குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: யாா் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நீங்கள் வேண்டுமென்றால் எனக்கு ரூ. 50 கோடி வாங்கித் தாருங்கள். முதலில் ரூ. 50 கோடி எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா?.

அவரிடம் யாரும் பேரம் பேசவில்லை. அவா் கூறும் அனைத்து தகவலும் முற்றிலும் தவறானது. நான் லாட்டரி வியாபாரம் செய்யவில்லை, கஞ்சா விற்கவில்லை. பழுத்த மரம்தான் கல்லடி படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.