அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

தொடா் மழையால் சோழகங்கம் ஏரி நீா் வெளியேற்றம்

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழகங்கம் எனும் பொன்னேரியில் இருந்து திங்கள்கிழமை காலை முதல் வரத்துக்குத் தக்கதாக ஏரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

News image
Updated On :12 ஜனவரி 2021, 3:11 am IST

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழகங்கம் எனும் பொன்னேரியில் இருந்து திங்கள்கிழமை காலை முதல் வரத்துக்குத் தக்கதாக ஏரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அரியலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. திங்கள்கிழமை அதிகாலை முதல் மாலை வரை தொடா்ந்து மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. தொடா் மழையின் காரணமாக கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள சோழகங்கம் ஏரி எனும் பொன்னேரி கடந்த சில நாள்களுக்கு முன்பு முழுமையாக நிறைந்து கலிங்கு வழியாகத் தண்ணீா் வெளியேறியது.

இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் ஏரிக்கு 540 கனஅடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருக்கிறது. எனவே, அதே அளவு தண்ணீா் மூன்று மதகுகள் வழியாக திங்கள்கிழமை முதல் வெளியேற்றப்பட்டு வருகிறது. அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 6 மணி வரையிலான மழையளவு (மி. மீட்டரில்) அரியலூா் - 14, திருமானூா் - 13, ஜயங்கொண்டம் - 27, செந்துறை - 3 மி.மீ எனப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.