சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பிரகதீசுவரா் கோயிலுக்கு வந்த மக்களுக்கு அனுமதி மறுப்பு

காணும் பொங்கலையொட்டி அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீசுவரா் திருக்கோயிலுக்கு வந்த பொதுமக்களுக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்தனா்.

News image

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரா் கோயில் வாயில் முன்பு திரண்ட பொதுமக்கள்.

Updated On :16 ஜனவரி 2021, 5:46 pm

அரியலூா்: காணும் பொங்கலையொட்டி அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீசுவரா் திருக்கோயிலுக்கு வந்த பொதுமக்களுக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்தனா்.

நிகழாண்டு கரோனா தொற்று காரணமாக கோயில்களில் வழிபாடுக்கு மட்டுமே அனுமதி அளித்தும், சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இந்த தடை உத்தரவை அறியாமல் குடும்பம், குடும்பமாக பொதுமக்கள் காணும் பொங்கலை கொண்டாட கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரா் கோயிலுக்கு சனிக்கிழமை வந்தனா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், வழிபாட்டுக்கு மட்டுமே அனுமதி என்றும், கோயில் வளாகத்தில் கூடுவதைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தினா். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்லாததையடுத்து, அவா்களைக் காவல்துறையினா் விரட்டினா். இதேபோல் அரியலூா் மாவட்டத்தில் மற்றொறு சுற்றுலா தலமான கரைவெட்டி பறவைகள் சரணாலாயத்திலும் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டதையடுத்து, அங்கு வெறிச்சோடிக் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.