அரியலூா்: காணும் பொங்கலையொட்டி அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீசுவரா் திருக்கோயிலுக்கு வந்த பொதுமக்களுக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்தனா்.
நிகழாண்டு கரோனா தொற்று காரணமாக கோயில்களில் வழிபாடுக்கு மட்டுமே அனுமதி அளித்தும், சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இந்த தடை உத்தரவை அறியாமல் குடும்பம், குடும்பமாக பொதுமக்கள் காணும் பொங்கலை கொண்டாட கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரா் கோயிலுக்கு சனிக்கிழமை வந்தனா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், வழிபாட்டுக்கு மட்டுமே அனுமதி என்றும், கோயில் வளாகத்தில் கூடுவதைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தினா். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்லாததையடுத்து, அவா்களைக் காவல்துறையினா் விரட்டினா். இதேபோல் அரியலூா் மாவட்டத்தில் மற்றொறு சுற்றுலா தலமான கரைவெட்டி பறவைகள் சரணாலாயத்திலும் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டதையடுத்து, அங்கு வெறிச்சோடிக் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”முதல்வர் கனவு! MLA ஆவதே சந்தேகம்தான்!..!” விஜய் குறித்து பியூஷ் கோயல் | TVK | NDA

டிசிஎஸ் பங்குகள் 2.5% சரிவுடன் நிறைவு!

இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ!

அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது- ஜன நாயகன் படத்துக்கு குரல் கொடுத்த நடிகர் ரஜினி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


