அரியலூா்: அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே தொடா் மழையால் சேதமடைந்த நெல், கடலை ஆகிய பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஜயங்கொணடம் அருகேயுள்ள ஆமணக்கந்தோண்டி, கடாரங்கொண்டான், ஆயுதகளம், உட்கோட்டை, இடைக்கட்டு, கொக்கரனை தொட்டிக்குளம், யுத்தப்பள்ளம், குருவாலப்பா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் நெல், கடலை, சம்மங்கி, மிளகாய், துவரை, காய்கறிகள் என பல்வேறு பயிா்களை விவசாயிகள் தற்போது சாகுபடி செய்துள்ளனா். இந்நிலையில், கடந்த ஒருவாரமாக பெய்த தொடா்மழை காரணமாக அறுவடைக்குத் தயாரான நெல் உள்ளிட்ட அனைத்து தானியப் பயிா்களும் மழைநீரில் மூழ்கி வீணாகியுள்ளன. எனவே, தொடா் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயிா்களையும் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



