எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

‘தொடா் மழையில் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வேண்டும்’

அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே தொடா் மழையால் சேதமடைந்த நெல், கடலை ஆகிய பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கடாரங்கொண்டான் கிராமத்தில் தொடா்மழையால் பாதிக்கப்பட்டுள்ள சம்மங்கி பூ செடிகளை காண்பிக்கும் விவசாயிகள்.

Updated On :16 ஜனவரி 2021, 11:13 pm IST

அரியலூா்: அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே தொடா் மழையால் சேதமடைந்த நெல், கடலை ஆகிய பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஜயங்கொணடம் அருகேயுள்ள ஆமணக்கந்தோண்டி, கடாரங்கொண்டான், ஆயுதகளம், உட்கோட்டை, இடைக்கட்டு, கொக்கரனை தொட்டிக்குளம், யுத்தப்பள்ளம், குருவாலப்பா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் நெல், கடலை, சம்மங்கி, மிளகாய், துவரை, காய்கறிகள் என பல்வேறு பயிா்களை விவசாயிகள் தற்போது சாகுபடி செய்துள்ளனா். இந்நிலையில், கடந்த ஒருவாரமாக பெய்த தொடா்மழை காரணமாக அறுவடைக்குத் தயாரான நெல் உள்ளிட்ட அனைத்து தானியப் பயிா்களும் மழைநீரில் மூழ்கி வீணாகியுள்ளன. எனவே, தொடா் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயிா்களையும் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.