காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

என் மகளின் எதிர்காலம், ஆரோக்கியம், படிப்பு, வேலை எப்படி இருக்கும்? நாங்கள் அனைவரும் வெளிநாடு (கனடா) சென்று வாழும் அமைப்பு உண்டா? 8-இல் புதன், சூரியன் நன்மையா? - வாசகர், சேலம்

உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், அனுஷ லக்னம், விருச்சிக ராசி. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான்

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், அனுஷ லக்னம், விருச்சிக ராசி. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெற்ற அயன ஸ்தானாதிபதியான சூரியபகவானுடன் இணைந்திருப்பது சிறப்பு. இதனால் புதபகவானின் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கி விடுகிறது. இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப்பிறகு புதபகவானின் தசையும் நடக்க இருப்பது நலமாகும். "மறைந்த புதன் நிறைந்த மதி, நிறைந்த நிதி' என்ற ஜோதிட வழக்கிற்கு ஏற்ப புதபகவானின் தசையில் அவருக்கு நல்ல படிப்பு, நல்ல வேலை ஆகியவை கிடைத்துவிடும். ஆரோக்கியத்திலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. லாபாதிபதியும் தைரிய ஸ்தானாதிபதியும் நீச்சம் பெற்று பரிவர்த்தனையும் பெற்று இருப்பதால் இதனை பரிவர்த்தனை ராஜயோகம் என்று கூறுவார்கள். அதனால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்துடன் கனடா போன்ற மேற்கத்திய நாடுகளுக்குச் சென்று நிரந்தரமாக வசிக்கும் யோகம் உண்டாகும். எதிர்காலம் வளமாக அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.