/

ஒப்பந்தப் பேருந்து சேவைகளின் கட்டணம் குறைப்பு

கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் பேருந்து சேவைகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 8:59 am IST

கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் பேருந்து சேவைகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் இயக்கப்படும் பேருந்துகள் திருமணம், ஆன்மிக பயணங்கள் உள்ளிட்டவைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் சேவைகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் பேருந்து சேவைகளின் கட்டணம் ஜன. 6-ஆம் தேதி குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஐராவதா கிளப் கிளாஸ் 49 வரை இருக்கை கொண்ட சொகுசுப் பேருந்துகளின் கட்டணம் கி.மீட்டருக்கு ரூ. 5 முதல் ரூ. 7 வரை குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக நாள் ஒன்றுக்கு 500 கி.மீ. இயங்க வேண்டும் என்பதனை 400 கி.மீ. எனக் குறைக்கப்பட்டுள்ளது.

ஐராவதா கிளப் கிளாஸ் 47 வரை இருக்கை கொண்ட சொகுசுப் பேருந்துகளின் கட்டணம் கி.மீட்டருக்கு ரூ. 5 முதல் ரூ. 10 வரை குறைக்கப்பட்டுள்ளது. ஐராவதா கிளப் கிளாஸ் 51 வரை இருக்கை கொண்ட சொகுசுப் பேருந்துகளின் கட்டணம் கி.மீட்டருக்கு ரூ. 10 குறைக்கப்பட்டுள்ளது. 37 படுக்கை வசதி கொண்ட குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகளின் கட்டணம் கி.மீட்டருக்கு ரூ. 5 முதல் ரூ. 6 வரை குறைக்கப்பட்டுள்ளது. 41 இருக்கை கொண்ட அதிா்வில்லா சொகுசுப் பேருந்துகளின் கட்டணம் கி.மீட்டருக்கு ரூ. 10 முதல் ரூ. 16 வரை குறைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.