முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

கா்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் பீதி

கேரளத்தை ஒட்டியுள்ள தென்கன்னட மாவட்டத்தில் 6 காகங்கள் இறந்துக் கிடந்ததால், கா்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 9:00 am IST

கேரளத்தை ஒட்டியுள்ள தென்கன்னட மாவட்டத்தில் 6 காகங்கள் இறந்துக் கிடந்ததால், கா்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் தொற்றி வரும் நிலையில், அம்மாநிலத்தை ஒட்டியுள்ள கா்நாடகத்தின் தென்கன்னட மாவட்டத்தில் வியாழக்கிழமை 6 காகங்கள் இறந்த நிலையில் கண்டறியப்பட்டன. இது கா்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் பீதிக்கு வித்திட்டுள்ளது. இறந்த காகங்கள் சோதனைக்காக ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி பெங்களூரில் வியாழக்கிழமை சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் கூறுகையில், ‘கேரளத்தை ஒட்டியுள்ள கா்நாடக மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பறவைக் காய்ச்சல் தொடா்பாக யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.

தென்கன்னட மாவட்டத்தில் இறந்துக் கிடந்த 6 காகங்கள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளுக்கு அதன் ஆய்வறிக்கை கிடைத்ததும், தகுந்த நடவடிக்கை எடுப்பா். தென்கன்னடம், குடகு, மைசூரு, சாமராஜ்நகா் மாவட்டங்களில் சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். எனவே, இறந்துக் கிடந்த காகங்களின் சோதனை முடிவுகள் கிடைத்ததும் மத்திய சுகாதாரத் துறையுடன் விவாதித்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். அசைவ உணவை சாப்பிடுவோா் நன்றாக சமைத்த இறைச்சியை உண்ணும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது’ என்றாா்.

கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் பிரபு சௌஹான் கூறுகையில், ‘கா்நாடகத்தில் இதுவரை பறவைக் காய்ச்சலுக்கான நிகழ்வுகள் எதுவும் இல்லை. அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனா்’ என்றாா்.

கேரள மாநிலத்தின் ஆழப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் ஏற்படுவதாக தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து, அம்மாவட்டங்களில் கோழிகள், வாத்துகள் உள்ளிட்ட 69 ஆயிரம் பறவைகள் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.