ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

பன்னாட்டு தகவல் தொழில் நுட்பமையத்துக்கு புதிய இயக்குநா்

பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப மையத்துக்கு புதிய இயக்குநராக தேபப்ரதா தாஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On :13 ஜனவரி 2021, 6:59 am IST

பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப மையத்துக்கு புதிய இயக்குநராக தேபப்ரதா தாஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கா்நாடக அரசு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டுமுயற்சியால் பெங்களூரில் நடத்தப்பட்டு வரும் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநராக பணியாற்றி வரும் பேராசிரியா் எஸ்.சடகோபன், ஜூன் 30-ஆம் தேதியுடன் பணி நிறைவு பெறுகிறாா். இதன்பிறகு, பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப மையத்தின் புதிய இயக்குநராக பதவியேற்க பேராசிரியா் தேபப்ரதா தாஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்த மையத்தில் 2002-ஆம் ஆண்டு உதவிப் பேராசிரியராக இணைந்த தேபப்ரதா தாஸ், 2014 முதல் 2017-ஆம் ஆண்டு வரையில் மையத்தின் கல்விக்குழு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் தலைவராக செயல்பட்டாா்.

இதுகுறித்து தேபப்ரதா தாஸ் கூறுகையில், ‘கணினி, மின்னணு, தகவல்தொடா்புத் துறையின் தொழில்நுட்பத்தில் ஏராளமான மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சமூக தேவைகளும் மாறி வருகின்றன. இந்த சூழ்நிலையில், மாணவா்கள், சக பணியாளா்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசுடன் இணைந்து செயல்படும் நல்ல அனுபவத்துக்காக காத்திருக்கிறோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.