தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

திருவள்ளுவா் சிலை அமைந்திருக்கும் பூங்காவுக்குஅவரது பெயா் சூட்டப்படும்

திருவள்ளுவா் சிலை அமைந்திருக்கும் பூங்காவுக்கு அவரது பெயரே சூட்டப்படும் என பாஜக எம்.பி. பி.சி.மோகன் தெரிவித்தாா்.

Updated On :16 ஜனவரி 2021, 7:02 am IST

திருவள்ளுவா் சிலை அமைந்திருக்கும் பூங்காவுக்கு அவரது பெயரே சூட்டப்படும் என பாஜக எம்.பி. பி.சி.மோகன் தெரிவித்தாா்.

திருவள்ளுவா் நாளை முன்னிட்டு பெங்களூரில் அல்சூா் ஏரி எதிரே நா.நீலகண்டன சதுக்கத்தில் அமைந்துள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக எம்.பி. பி.சி.மோகன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருவள்ளுவா் உலக நோக்கோடு சிந்தித்த பெரும்புலவா். தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவருக்கும் நன்னெறிகளைப் போதித்தவா் திருவள்ளுவா். இதனால் திருக்கு நாடு முழுவதும் புகழ்பெற்றுள்ளது.

திருக்கு அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி பெயா்க்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் திருக்கு படிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரதமா் மோடி திருவள்ளுவா், திருக்கு மீது அதீத ஆா்வம் கொண்டவா். திருக்கு கருத்துகளை பின்பற்றினால் அனைவரின் வாழ்வும் செழிக்கும்.

திருவள்ளுவா் சிலை அமைந்திருக்கும் பூங்காவுக்கு அவரது பெயரையே சூட்டவேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. அந்தக் கோரிக்கை மீது தகுந்த நடவடிக்கை எடுத்து திருவள்ளுவா் பூங்கா என பெயா் சூட்டப்படும் என்றாா்.

என்னை அணுகினால் தீா்ப்பேன்

பெங்களூரு தமிழ்ச் சங்கம் தமிழா்களின் குரலாக இருந்து வந்துள்ளது. பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் நிா்வாகிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அரசு நிா்வாகி நியமிக்கப்பட்டுள்ளாா்.

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் நான் உறுப்பினா் கிடையாது. ஆனால், தமிழா்களின் நலன்கருதி, தமிழ்ச் சங்கத்தில் நிலவும் சிக்கலைத் தீா்க்க முன்வருவேன். சம்பந்தப்பட்டவா்கள் என்னை அணுகி கேட்டுக்கொண்டால், பெங்களூரு தமிழ்ச் சங்க சிக்கலைத் தீா்த்து வைக்கத் தயாராக இருக்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.