நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கேரளத்தில் 2027-க்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு! ஆளுநர் ஆர்லேகர் தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றி..

News image

2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தை ஆளுநர் ஆர்லேகர் தொடங்கிவைத்தார். - file photo

Updated On :16 ஜூன் 2026, 5:59 pm IST

கேரளத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தை ஆளுநர் ஆர்லேகர் தொடங்கிவைத்தார்.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்,

சுய-கணக்கெடுப்புப் பணியை நிறைவு செய்த பிறகு, 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை உள்ளடக்கியதாகவும் துல்லியமானதாகவும் அமைத்து அதனைப் பெரும் வெற்றியடையச் செய்ய, இப்பணியில் அனைவரும் முழு மனதுடன் பங்கேற்றுத் தீவிரமாகப் பங்களிக்குமாறு ஆளுநர் வலியுறுத்தினார்.

பொதுமக்கள் se.census.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்கும் வகையிலான சுய-கணக்கெடுப்பு வசதி தற்போது செயல்பாட்டில் உள்ளது.

வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளப்படும் வீடுகளைப் பட்டியலிடுதல், வீட்டு வசதி குறித்த கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில், வீடுகளின் நிலை, அங்குள்ள வசதிகள் மற்றும் தனிப்பட்ட குடும்பங்களின் உடைமைகள் குறித்த தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது உலகின் மிகப்பெரிய நிர்வாக மற்றும் புள்ளிவிவர நடவடிக்கையாகும். கடந்த 150 ஆண்டுக்கால இந்தியக் கணக்கெடுப்புப் பணிகளில் பயன்படுத்தப்பட்ட காகித படிவங்களுக்கு விடை கொடுத்து. இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பாக இது அமைகிறது.

கேரளத்தில் 2027-க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் 2026 ஜூலை 1 முதல் 30 வரை நடைபெறவுள்ளது. அதேவேளையில், சுய-கணக்கெடுப்பு ஜூன் 16 முதல் 30 வரை நடைபெறும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.