‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

அடுத்தாண்டு பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: விழுப்புரம் ஆட்சியா் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் எண்ம முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

News image

விழுப்புரம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான். உடன் மாவட்ட வருவாய் அலுவலா் கி. அரிதாஸ் உள்ளிட்டோா்.

Updated On :22 மே 2026, 7:05 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் எண்ம முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்று பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்த ஆட்சியா் மேலும் பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 பணியின் முதற்கட்டமாக 17.7.2026 முதல் 31.8.2026 வரை 45 நாள்களுக்கு வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

2- ஆவது கட்டமாக 2027 பிப்ரவரி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்படும்.

இந்த நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து அரசு அலுவலா்களுக்கு 3 நாள்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பை அலுவலா்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மேலும், கணக்கெடுப்பு பணியின்போது பொதுமக்களிடம் நல்ல முறையில் அணுக வேண்டும்.

2011-ஆம் ஆண்டில் கையேடு முறையில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தற்போது எண்ம (டிஜிட்டல்) முறையில் நடைபெறவுள்ளது என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) லூா்துசாமி, மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குநா் (பயிற்சி) யசோதா மற்றும் வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், நகராட்சிஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.