பெங்களூரில் 8 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்தாா்.
பெங்களூரில் உள்ள இந்திரா நகா் சி.வி.ராமன் மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சி.வி.ராமன் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசிகள் பெங்களூரின் 8 இடங்களிருந்து செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விக்டோரியா மருத்துவமனை, கே.சி. பொதுமருத்துவமனை, ஜெயநகா், சா்.சி.வி.ராமன் நகா், ஈஸ்ட் எண்ட், எலஹங்கா உள்ளிட்ட 8 அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசிகள் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய அளவில் கரோனா தடுப்பூசியை செலுத்தும் நிகழ்ச்சியை சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறாா். அப்போது, பெங்களூரு, ஹுப்பள்ளி ஆகிய நகரங்களில் காணொலி மூலம் கரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியை பிரதமா் தொடக்கி வைக்கிறாா். அதன் பிறகு பெங்களூரில் தடுப்பூசிகள் செலுத்தும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெறும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









