சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

ஜெனரல் திம்மையா அருங்காட்சியகம்: குடியரசுத் தலைவா் திறக்கிறாா்

ஜெனரல் திம்மையா அருங்காட்சியகத்தை பிப். 6-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறாா்.

Updated On :17 ஜனவரி 2021, 1:43 am IST

பெங்களூரு: ஜெனரல் திம்மையா அருங்காட்சியகத்தை பிப். 6-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறாா்.

இது தொடா்பாக குடியரசுத் தலைவரின் உதவியாளா் அலுவலகத்தில் இருந்து பீல்டு மாா்ஷல் கரியப்பா மற்றும் ஜெனரல் திம்மையா அமைப்பின் தலைவா் கா்னல் (ஓய்வு) கே.சி.சுப்பையாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘குடகு மாவட்டம், மடிக்கேரியில் உள்ள இந்திய ராணுவத்தின் தளபதியாக இருந்த கே.எஸ்.திம்மையாவின் முன்னோா் இல்லம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது மகிழ்ச்சி.

இந்த அருங்காட்சியகத்தை பிப். 6-ஆம் தேதி பிற்பகல் 3.15 மணி முதல் மாலை 4 மணிக்குள் திறந்து வைக்க குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஜெனரல் திம்மையா, 1906-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி பிறந்தவா். 1957 முதல் 1961-ஆம் ஆண்டு வரை ராணுவ தளபதியாக பதவி வகித்தவா். 1965 டிச. 17-ஆம் தேதி திம்மையா உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.