தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

'புகழ் பெற்ற ஏழைகள்': இரண்டே வரிகளில் வாழ்க்கைத் தத்துவம்! -பி.வி.கிரி

ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் முன்னேறி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்கள். இந்த ஏழைகளின் வெற்றியை விவரிக்கும் நூல்தான் ’புகழ் பெற்ற ஏழைகள்’ என்ற ஆங்கில நூல்.

News image

பி.வி. கிரி

Updated On :5 ஏப்ரல் 2021, 1:30 am

அந்தச் சிறுவனுக்குக் காலுக்குச் செருப்பில்லை; உடுத்திக் கொள்ள நல்ல ஆடையும் இல்லை. மான் தோலால் ஆன அரை நிஜாரை அணிந்திருந்தான். வறுமையால் உழன்ற அந்த சிறுவனுக்கு ’வாஷிங்டனின் வாழ்க்கை’ என்ற பழைய நூல் படிக்கக் கிடைத்தது. ஒருநாள் பெய்த மழையில் அவனது ஓட்டை மர வீடு ஒழுகி அந்தப் புத்தகம் நானைந்துவிட்டது. அதன் உரிமையாளருக்கு நாள் ஒன்றுக்கு இருபத்தைந்து சதவீதம் மூன்று நாள்கள் கூலி வேலை செய்து அந்தப் புத்தகத்தின் மதிப்பைச் செலுத்தி அதைத் தனதாக்கிக் கொண்டான். உடுத்த கால்சட்டை இல்லாத நிலையில் அதை வாங்க நானூறு மரக்கட்டைகளை உடைத்து அந்தக் கூலியின் கால் சட்டை வாங்கினான். அவன் யார்? அவன் தான் பின்னாளில் அமெரிக்க ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கன்.

சிறுவயதில் தெருவில் பத்திரிகைகளையும் ரயிலில் புத்தகங்களையும் விற்ற தாமஸ் ஆல்வா எடிசன் பின்னாளில் புகழ் பெற்ற விஞ்ஞானியானார்.

இப்படி ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் முன்னேறி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்கள். இந்த ஏழைகளின் வெற்றியை விவரிக்கும் நூல்தான் ’புகழ் பெற்ற ஏழைகள்’ என்ற ஆங்கில நூல். இதை எழுதியவர் சாரா கே.போல்டன். தமிழில் இந்த நூலை குண்டூசி கோபால் மொழிபெயர்த்துள்ளார். மும்பையிலிருந்து பெர்ல் பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் 1960-ல் 236 பக்கங்களில் வெளியிட்ட இந்த நூலின் அப்போதைய விலை 75 காசுகளே.

வறுமையில் உழன்று கால வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறிய பதினேழு மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறுகள் இந்த நூலில் சித்தரிக்கப்பட்டுள்ளன. பெஞ்சமின் பிராங்கிளின், மைக்கேல் பாரடே, கரிபால்டி, சார்லஸ் சிக்கென்ஸ். ஹென்றி ரூதர் போர்டு முதலிய

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.