ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

‘ஆழ்மனதின் அற்புத சக்திகள்’

புத்தகம்: ‘ஆழ்மனதின் அற்புத சக்திகள்’

News image
Updated On :19 ஏப்ரல் 2020, 3:27 pm

DIN

‘ஆழ்மனதின் அற்புத சக்திகள்’

‘நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்’ என்றார் விவேகானந்தர். அதாவது மனதின் வலிமையே உடலின் வலிமை. நம் மனதிற்கு அத்தகைய சக்தி உண்டு. அத்தகைய மனதின் சக்தி குறித்த முழுமையான புரிதலை இப்புத்தகம் தருகிறது.

நம் மனநிலைகள் மூளையில் ஏற்படுத்தும் நான்கு வகை மின்னலைகள், அந்த அலைநிலைகளில் கிடைக்கப்பெறும் சக்தி, அத்தகைய உன்னத சக்தி நிலையை அடைய எளிய தியானப் பயிற்சிகள், அவை குறித்த அறிவியல் ரீதியான ஆராய்ச்சிகள் என 60 அத்தியாயங்களில் ஆசிரியர் எளிமையாக விளக்கியுள்ளார்.

குறிப்பாக நோய்களைக் குணப்படுத்தும் ஆழ்மன சக்தி குறித்த கட்டுரை வைரஸ் தொற்று மிகவேகமாகப் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் இந்த வேளையில் அதை எதிர்கொள்ளத் தேவையான மனவலிமையைப் பெற உதவும். முக்கியமாக கட்டுப்பாடின்றி மனம் போன போக்கில் வாழும் இன்றைய இளைய தலைமுறை படிக்கவேண்டிய புத்தகம். மனதை நம் வசப்படுத்தி அதன் சக்தியை முழுமையாக அறிந்து, நல் வழியில் பயன்படுத்தி வளமோடு வாழ்வோம்.

- ஆர். கீதாஞ்சலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.