ஆய்வுக்கோவை – இரண்டாம் பாகம்

ஆய்வுக்கோவை – இரண்டாம் பாகம்
ஆய்வுக்கோவை – இரண்டாம் பாகம்
Published on
Updated on
1 min read


ஆய்வுக்கோவை – இரண்டாம் பாகம்

கரானா நேரத்தில் படித்ததில் பிடித்த நூல், இந்தியப் பல்கலைத் தமிழாசிரியர் மன்றம் வெளியிட்ட 2008 ஆம் ஆண்டிற்கான ஆய்வுக்கோவை – இரண்டாம் பாகம்

பொதுவாக ஆய்வு தொடர்பான புத்தகங்கள் நூலகங்களில் கிடைக்கப்பெறுவது இன்றுவரை அரிதானதாக இருந்து வருகிறது. ஆய்வுக் கட்டுரை படித்தவர்களுக்கு மட்டும் இந்நூல் கிடைக்கிறது. ஆராய்ச்சி நூலகங்களிலும் முழுமையாக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் கிடைக்கப்பெறுவதில்லை. இதனால் ஆராய்ச்சியாளர்கள் இந்நூலைப் பாதுகாத்து வைக்கவேண்டியுள்ளது. 

இந்நூலில் பல கட்டுரைகள் உள்ளடங்கியுள்ளன. காந்தியின் கருத்துகளைப் பின்பற்றி நடக்கும் இந்தியர், கள்ளுக்கடை ஒழிப்பிற்கு ஏன் துணை போக மறுக்கவேண்டும்? கோபல்லபுரத்து மக்கள் நாவலில் காந்தியம் தொடர்பான கட்டுரை சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. 

எஸ்.இராமகிருஷ்ணன் எழுதிய இரண்டு வளையல்கள் கதை குறித்தும் காந்திக்கு வளையல் கொடுத்த குடும்பம் பிழைக்க வழியின்றி தங்க வளையல் விற்று கண்ணாடி வளையல் போடும் சமூகத்தின் இன்றைய நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

பக்கம் 664இல் ஆனந்த விகடன் குறித்த கட்டுரையில் 29.03.1987இல்  அரசியல் அட்டைப்பட கார்ட்டூன் தொடர்பாக  ஆளும்கட்சி பத்திரிகை ஆசிரியருக்கு சிறைத்தண்டனை அளித்ததும், அதற்கு சட்டம் பத்திரிகையாளருக்கு விடுதலை அளித்து நஷ்டஈடும் பெற்றுத் தந்தது. ஆனால் இன்று பத்திரிகைகள் வாய் மௌனமாக உள்ளதன் மர்மம் விளங்கவில்லை.

கந்தர்வன் சிறுகதையில் விதவைப்பெண் குறித்த காளிப்புள்ளே,பெண் சிசுக்கொலை தொடர்பான பாரதிராஜாவின் திரைப்படம், தகப்பன் இறந்த நிலையில் புறநானூறு காட்டும் வாழ்வியல், திருமந்திரம் காட்டும் மாமதயானை தத்துவம் என நீண்டு தமிழின் பெருமையை விளக்குகிறது.

கவிஞர் சிற்பியின் பரமபதத்துச் சோபன படம் எங்கள் தேசம் அதில் கட்டங்கள்தோறும் நச்சுப்பாம்புகள் காத்துக் கிடக்கின்றன என்ற  கவிதை வரிகள் இன்றைய உலக நடப்பைக் காட்டுகிறது.

சிலம்பை உடைத்து என்ன பயன்? அரியணையிலும் அந்த பொற்கொல்லன் – தமிழன்பன்

இராமர் கோவிலா! பாபர் மசூதியா! இந்தியனே! இந்தியனே! முதலில் நீ இருக்க இடம் தேடு! ஆண்டவனுக்கு வேண்டிய இடத்தை அவன் தேடிக்கொள்வான்! எந்த மதக்கொள்கையையும் ஏற்றுக் கொள்ளுங்கள்! ஆனால், அதை இரத்தத்தில் கழுவி அழுக்காக்காதீர்கள்! -  மு.மேத்தா போன்ற கவிஞர்களின் கவிதைகள் உத்திகளைப் பேசுகின்றன.

- டாக்டர் பி.ஆர். லக்ஷ்மி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com