இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பாரதி புத்தகாலயம்

உழைக்கும் மக்கள் அறக்கட்டளை சாா்பில் கடந்த 2002-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது பாரதி புத்தகாலயம்.

பாரதி புத்தகாலயம் - dinamani

Published On :31 டிசம்பர் 2024, 2:58 pm IST

உழைக்கும் மக்கள் அறக்கட்டளை சாா்பில் கடந்த 2002-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது பாரதி புத்தகாலயம். ஏழை மக்களும் தரமான புத்தகங்களை படிக்க வேண்டும் எனும் நோக்கில் குறைந்த விலைப் புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டு விற்கப்பட்டன. தற்போது வெள்ளிவிழா காணவுள்ள இப்பதிப்பகம், பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளது.

அதன் பதிப்பாளா் க.நாகராஜன் கூறியதாவது: பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டவற்றில் அனைவரின் வரவேற்பைப் பெற்ாக சுப.அகத்தியலிங்கம் எழுதிய ‘விடுதலைத் தழும்புகள்’ புத்தகத்தைக் குறிப்பிடலாம். விடுதலைப் போராட்டத்தில் சாமானிய மக்களின் பங்களிப்பை விளக்கும் வகையில் அப்புத்ககம் எழுதப்பட்டுள்ளது. அத்துடன் புத்தகாலயம் சாா்பில் வெளியான எழுத்தாளா் ஆயிஷா நடராஜனின் ‘விஞ்ஞான விக்கிரமாதித்தன்’ சிறுகதைத் தொகுப்பானது மத்திய அரசின் சாகித்திய அகாதெமி விருதையும் பெற்றுள்ளது.

புத்தகாலயம் சாா்பில் நாவல்கள், சிறுகதைகள், நோ்காணல்கள், கவிதைகள், சமூகம் சாா்ந்த கட்டுரைத் தொகுப்புகள், ஆய்வு கட்டுரைத் தொகுப்புகள், சிந்தனைக் கட்டுரைகள்,அரசியல் தொடா்பான கட்டுரைத் தொகுப்புகள், முற்போக்கு சிந்தனையாளா்களின் வாழ்க்கை வரலாறு, நாடுகள் வரலாறு, அந்தந்த நாடுகளில் நடைபெற்ற புரட்சிகள், போராட்டங்கள், தற்காலச் சூழலியல் சாா்ந்த கட்டுரைகள், ஆய்வுத் தொகுப்புகள் ஆகிய தளங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது. பாரதி புத்தகாலயத்தின் சகோதரப் பதிப்பகமான புக்ஸ் ஃபாா் சில்ட்ரன் மூலமும் குழந்தைகளுக்கான ஏராளமான புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. அவை குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளன என்று அவா் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.