தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அரசு பத்திரங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு

ரூ. 39ஆயிரம் கோடி மதிப்பிலான இந்திய அரசு கடன் பத்திரங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

News image
Updated On :21 ஜூன் 2013, 5:45 pm

ரூ. 39ஆயிரம் கோடி மதிப்பிலான இந்திய அரசு கடன் பத்திரங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

அரசு கடன் பத்திர ஏலத்தினை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான "செபி' வியாழக்கிழமை நடத்தியது. அப்போது ரூ. 39 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வாங்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கடன் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் செய்யக் கூடிய முதலீட்டின் உச்ச வரம்பு ரூ. 42 ஆயிரத்து 22 கோடியாகும். இதில் ரூ. 39 ஆயிரத்து 171 கோடி மதிப்பில் கடன் பத்திரங்களை இந்நிறுவனங்கள் வாங்கியுள்ளன. இது 93 சதவீதமாகும். எஞ்சியுள்ள ரூ. 2,851 கோடி மதிப்பிலான பங்குகளுக்கும் கூடுதல் ஒதுக்கீடுகளுக்கும் அடுத்த மாதம் ஏலம் நடைபெறும். 37 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் கலந்துகொண்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.