ரூ. 39ஆயிரம் கோடி மதிப்பிலான இந்திய அரசு கடன் பத்திரங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
அரசு கடன் பத்திர ஏலத்தினை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான "செபி' வியாழக்கிழமை நடத்தியது. அப்போது ரூ. 39 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வாங்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கடன் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் செய்யக் கூடிய முதலீட்டின் உச்ச வரம்பு ரூ. 42 ஆயிரத்து 22 கோடியாகும். இதில் ரூ. 39 ஆயிரத்து 171 கோடி மதிப்பில் கடன் பத்திரங்களை இந்நிறுவனங்கள் வாங்கியுள்ளன. இது 93 சதவீதமாகும். எஞ்சியுள்ள ரூ. 2,851 கோடி மதிப்பிலான பங்குகளுக்கும் கூடுதல் ஒதுக்கீடுகளுக்கும் அடுத்த மாதம் ஏலம் நடைபெறும். 37 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் கலந்துகொண்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு!

அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் செங்கடலை முடக்குவோம்! - ஈரான் எச்சரிக்கை!

இந்தப் படமும் ரூ.100 கோடி நிச்சயம்..! விஜய் பாணியில் பேசிய விக்னேஷ் சிவன்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


