தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ரூபாய் மதிப்பில் சற்று உயர்வு

வெள்ளிக்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சற்றே உயர்ந்து 59.27 ஆக இருந்தது.

News image
Updated On :21 ஜூன் 2013, 5:41 pm

வெள்ளிக்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சற்றே உயர்ந்து 59.27 ஆக இருந்தது.

வியாழக்கிழமை செலாவணி சந்தையில் ஒரு அமெரிக்க டாலருக்கு ஏறத்தாழ 60 ரூபாய் தர வேண்டியிருந்தது. இந்த வரலாறு காணாத வீழ்ச்சியை சரி செய்ய வெள்ளிக்கிழமை இந்திய அரசுத் துறை வங்கிகள், ரிசர்வ் வங்கியின் சார்பில் அதிக அளவில் டாலர்களை விற்றதாக கூறப்படுகிறது. இதனால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 30 காசுகள் அதிகரித்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை செலாவணி சந்தையில் வர்த்தகம் தொடங்கியபோது, ரூபாயின் மதிப்பு 59.74 என்ற அளவில் இருந்தது. வியாழக்கிழமையின் இறுதி நிலை 59.57 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத் தகுந்தது. அமெரிக்க பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அடுத்த ஆண்டில் குறைத்துக் கொள்ள அந்நாட்டு மத்திய வங்கி முடிவெடுத்துள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து உலகெங்கும் அன்னிய செலாவணி சந்தைகள் மற்றும் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. இதன் தாக்கம் இந்திய செலாவணி சந்தையிலும் பங்குச் சந்தையிலும் வெளிப்பட்டது.

ப.சிதம்பரம் நம்பிக்கை:ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவைக் கண்டு பதற்றம் அடையத் தேவையில்லை, ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.புது தில்லியில் வெள்ளிக்கிழமை ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: செலாவணி சந்தையை அரசு உன்னிப்பாக நோக்கி வருகிறது. இந்த விவகாரத்தில் எந்த விதமான நடவடிக்கைகளை எல்லாம் எடுக்க வேண்டுமோ அவற்றை ரிசர்வ் வங்கி எடுக்கும். நம்மிடம் மிகச் சிறந்த பொருளாதார ஆலோசகர்கள் இருக்கிறார்கள்.

செலாவணி சந்தை மற்றும் பங்குச் சந்தையைப் பொருத்த வரையிலும் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், பதற்றமோ பீதியோ அடையாதீர்கள் என்பதுதான். இந்தியாவில் செலாவணி சந்தையிலும் பங்குச் சந்தையிலும் காணப்பட்ட இந்த வீழ்ச்சி உலகின் பிற சந்தைகளில் இருக்கிறது என்பதை உணர வேண்டும் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.