நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இயற்கை எரிவாயு விநியோகத்தில் களமிறங்க ஐஓசி, பிபிசிஎல் முடிவு: "கெயில்' நிறுவனத்தைக் கைப்பற்றுவதில் ஆர்வம்

மத்திய அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடட் (பிபிசிஎல்) ஆகியவை,

News image
Updated On :26 டிசம்பர் 2017, 12:29 am IST

மத்திய அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடட் (பிபிசிஎல்) ஆகியவை, இயற்கை எரிவாயுப் போக்குவரத்து மற்றும் விற்பனைத் துறையில் களமிறங்க முடிவு செய்துள்ளன.
 இதற்காக, இந்தியாவின் இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகத்தை கவனித்து வரும் "கேஸ் (இந்தியா) லிமிடட்' (கெயில்) நிறுவனத்தை கையகப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
 இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
 பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவை மட்டுமன்றி, இயற்கை எரிவாயு விற்பனை, விநியோகம், போக்குவரத்து ஆகியவற்றிலும் ஈடுபட்டு, முழுமையான எரிபொருள் நிறுவனமாகச் செயல்பட இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களான ஐஓசி-யும், பிபிசிஎல்-லும் விரும்புகின்றன.
 இதற்காக, கெயில் நிறுவனத்தைக் கையகப்படுத்தி தங்களுடன் இணைத்துக் கொள்ள அந்த நிறுவனம் ஆர்வம் காட்டி வருகின்றன.
 எனினும், கெயில் நிறுவனமோ, மத்திய அரசுத் துறையைச் சேர்ந்த ஆயில் அண்டு நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷனுடன் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.
 2017-18-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தபோது, அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் சேவைகள் உலகத் தரத்துக்கு இணையாகத் திகழும் வகையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
 அதன் அடிப்படையிலேயே இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் தங்களது விருப்பத்தைத் தெரிவித்து வருகின்றன.
 இதற்கிடையே, நிதியமைச்சரின் ஒருங்கிணைப்புத் திட்டத்தின் கீழ், மத்திய அரசுக்குச் சொந்தமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டில் (ஹெச்பிசிஎல்) 51.11 சதவீத பங்குகளை வாங்கி, அந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தும் தனது விருப்பதையும் தெரிவித்துள்ளது.
 எனினும், நிறுவனங்களின் இந்தக் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. நிறுவனங்களின் இணைப்பைப் பொருத்தவரை, அது லாபகரமாகவும், அந்த நிறுவனங்களின் மீதான தனது கட்டுப்பாடு குலையாமலும் இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.