காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

வீட்டு வசதிக் கடன்களுக்கு  8.20% வட்டி விகிதம்

வீட்டு வசதிக் கடன்களை ஆண்டுக்கு 8.20 சதவீதம் என்ற விகிதத்தில் பெறலாம் என்று இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

Published On :22 ஜூலை 2025, 3:10 pm IST


வீட்டு வசதிக் கடன்களை ஆண்டுக்கு 8.20 சதவீதம் என்ற விகிதத்தில் பெறலாம் என்று இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகித பரிந்துரையின் தொடர்ச்சியாக இந்தியன் வங்கியின் வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன் ஆகியவற்றுக்கான புதிய வட்டி விகிதம் செப்டம்பர் 4-ஆம் தேதி அமலுக்கு வந்தது. தற்போது வீட்டு வசதிக் கடன்களை ஆண்டுக்கு 8.20 சதவீதம் என்னும் வட்டி விகிதத்திலே பெறலாம். இது சந்தையில் விளங்கும் மிகக்குறைந்த வட்டி விகிதமாகும். இதைப்போல, வாகனக் கடன்களை ரெப்போ விகித முறையின் கீழ் ஆண்டுக்கு 8.85 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் பெற்றுக்கொள்ளலாம். இதுவும் சந்தையில் விளங்கும் மிகக்குறைந்த வட்டி விகிதமாகும்.
சிறப்பு அம்சங்கள்:  வீட்டுவசதிக் கடனைப் பொருத்தவரை, அதிகப்படியான திரும்பச் செலுத்துதலுக்கான கால வரையறை 30 ஆண்டுகள், அதிகபட்ச உச்சவரம்பு இல்லை. 2020-ஆம் ஆண்டு ஜனவரி 31 -ஆம்தேதி வரை  விண்ணப்ப பரிசீலனை கட்டணம் கிடையாது. வாகனக் கடனைப் பொருத்தவரை, புதிய நான்கு சக்கர வாகனம் வாங்குவதற்கு மட்டுமே இந்த வட்டி விகிதம் பொருந்தும். அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை கடன் பெறலாம்.  திரும்பச் செலுத்துவதற்கான அதிகபட்ச கால வரையறை 84 மாதங்கள். இந்தத் தகவல் இந்தியன் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.