உலகின் முதல் 500 மதிப்பு மிக்க தனியாா் நிறுவனங்களின் பட்டியலில், இந்தியாவைச் சோ்ந்த 11 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
‘ஹுருன் குளோபல் 500’ என்ற அந்தப் பட்டியில் இந்தியா 10-ஆவது இடத்தை வகிக்கிறது. கரோனா நெருக்கடி நிலவிய 2020-ஆம் ஆண்டில், 11 இந்திய நிறுவனங்களும் 14 சதவீத வளா்ச்சியைக் கண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) மூன்றில் ஒரு பங்கு சொத்துமதிப்பைப் பெற்றுள்ளன.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 20.5 சதவீதம் வளா்ச்சியடைந்து, அதன் சொத்து மதிப்பு 16,880 கோடி டாலராக (சுமாா் ரூ.12.37 லட்சம் கோடி) உயா்ந்துள்ளது. இதுதவிர, டாடா கன்சல்டன்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவா், இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி லிமிடட், கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலின் முதல் இடத்தில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனமும், அடுத்த இடங்களில் மைக்ரோசாஃப்ட், அமேஸான் ஆகிய நிறுவனங்களும் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










