தொடர் வீழ்ச்சியில் இருந்து மீண்ட சென்செக்ஸ் மீண்டும் சரியத் தொடங்கியிருக்கிறது.
பங்குசந்தை கடந்த வாரம் தொடர் வீழ்ச்சியை சந்தித்ததால் குறியிட்டு எண் சென்செக்ஸ் 15 நாட்களுக்குப் பிறகு 60,000 புள்ளிகளுக்குக் கீழ் குறைந்திருந்தது.
இதையும் படிக்க | கடும் சந்தை வீழ்ச்சியில் கிரிப்டோகரன்சி!
நேற்று(நவ.23) ‘காளை’ ஆதிக்கத்தால் சென்செக்ஸ் 198.44 புள்ளிகள் அதிகரித்து 58,664.93-இல் நிலைபெற்றது.
இந்நிலையில் இன்று 58,839.9 புள்ளிகளில் ஆரம்பித்த சென்செக்ஸ் அதிகபட்சமாக 58.968.12 வரை சென்று கீழ் இறங்கத் தொடங்கி சந்தையில் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் 323 புள்ளிகள் சரிந்து 58.340.99 நிலைபெற்றிருக்கிறது.
இதேபோல் 17,550.05 புள்ளிகளில் தொடங்கிய நிஃப்டி சந்தை முடிகிற நேரத்தில் 88 புள்ளிகள் சரிந்து 17,415.05 புள்ளிகள் பெற்று சரிவுடன் நிலைபெற்றிருக்கிறது.