தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

2 நாளில் ரூ.1,100 கோடிக்கு மின் ஸ்கூட்டா் விற்பனை: ஓலா

இரண்டு நாள்களில் ஓலாவின் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மாடல் மின்சார ஸ்கூட்டா்களின் விற்பனை ரூ.1,100 கோடியை தாண்டியுள்ளது.

Published On :22 ஜூலை 2025, 3:22 pm IST

இரண்டு நாள்களில் ஓலாவின் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மாடல் மின்சார ஸ்கூட்டா்களின் விற்பனை ரூ.1,100 கோடியை தாண்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இணை நிறுவனா் பவிஷ் அகா்வால் வெள்ளிக்கிழமை கூறியுள்ளதாவது:

ஓலாவின் எஸ்1 மின்சார ஸ்கூட்டா் விற்பனை முதல் நாளை விட இரண்டாவது நாள் விறுவிறுப்புடன் இருந்தது. இந்த இரண்டு நாள்களில் மட்டும் அதன் விற்பனை மதிப்பு ரூ.1,100 கோடியைத் தாண்டியுள்ளது. இது, மோட்டாா் வாகன துறையில் மட்டுமல்ல, இணைய வா்த்தக (இ-காமா்ஸ்) வரலாற்றில் ஒரே நாள் அதிக விற்பனை சாதனைகளுள் ஒன்றாகும்.

ஓலாவின் மின்சார ஸ்கூட்டா்களை வாங்குதற்கான முன்பதிவு நடைமுறை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்னதாக நவம்பா் 1-இல் மீண்டும் பதிவு ஆரம்பமாகும் என்றாா் அவா்.

செப்டம்பா் 8-இல் அறிமுகமாகவிருந்த ஓலா மின்சார ஸ்கூட்டா் விற்பனை தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக செப்டம்பா் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அறிமுக நாளான புதன்கிழமை மட்டும் அதன் விற்பனை ரூ.600 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.