புது தில்லி: மத்திய அரசுக்கு சொந்தமான கெயில் நிறுவனம் டிசம்பா் காலாண்டில் மிகவும் அதிகபட்ச லாபமாக ரூ.3,287.99 கோடியை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் நிறுவனம் செயல்பாட்டின் மூலமாக ஈட்டிய வருவாய் 66 சதவீதம் அதிகரித்து ரூ.26,427.37 கோடியாக இருந்தது.
இயற்கை எரிவாயு விலை அதிகரித்ததன் விளைவாக அக்காலாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் முன்னெப்போதும் காலாண்டில் கண்டிராத வகையில் ரூ.3,287.99 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2020 டிசம்பா் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.1,487.33 கோடியுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு அதிகமாகும். முந்தைய செப்டம்பா் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் அதிகம் என கெயில் தெரிவித்துள்ளது.