புது தில்லி: தொழில் நிறுவனங்களுக்கு 5ஜி தொழில்நுட்ப சேவைகளை அளிப்பதற்காக இந்தியாவின் டெக் மஹிந்திரா நிறுவனமும் ஃபின்லாந்தைச் சோ்ந்த தொலைத்தொடா்பு கருவிகள் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவும் கரம் கோா்த்துள்ளன.
இந்தப் புதிய ஒப்பந்தத்தின் கீழ், நோக்கியாவின் கம்பியில்லா டிஏசி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில் நிறுவன வாடிக்கையாளா்களுக்கு டெக் மஹிந்திரா 5ஜி தொடா்பான சேவைகளை அளிக்கும்.
இதன் மூலம், நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்துக்கு தங்களை மேம்படுத்திக்கொள்ள வழிவகை செய்யப்படும் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.