கடும் சரிவில் கிரிப்டோகரன்சி: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடும் சரிவில் கிரிப்டோகரன்சி: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில், முதலீடு செய்யப்பட்ட நாணயங்கள் கடுமையான சந்தை மதிப்பை இழந்து வருகின்றன. 

கிரிப்டோவின் அடையாளமான பிட்காயினின் ஓர் பங்கின் விலை ஒரே வாரத்தில் ரூ.32 லட்சத்தில் இருந்து தற்போது ரூ.24 லட்சமாக குறைந்ததுள்ளது. இதேபோல பல நாணயங்களும் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக, லூனா கரன்சி பங்கின் விலை ரூ. 7,000-திலிருந்து ரூ.350 ஆக குறைந்ததால் அதில் முதலீடு செய்தவர்கள் கடும் இழப்பைச் சந்தித்துள்ளனர்.

மேலும், எலான் மஸ்க் முதலீடு செய்திருக்கும் கிரிப்டோ நாணயமான டோஜ் காயினின் விலையும் குறைந்து காணப்படுவதால்  முதலீட்டாளர்கள் புலம்பி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com