நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

தனலக்ஷ்மி வங்கி நிகர லாபம் ரூ.3 கோடி

தனலக்ஷ்மி வங்கி நிகர லாபம் ரூ.3 கோடி

News image
Updated On :21 பிப்ரவரி 2024, 4:10 am IST

புது தில்லி: தனியாா் துறையைச் சோ்ந்த தனலக்ஷ்மி வங்கியின் நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் ரூ.3 கோடியாகப் பதிவாகியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2023 டிசம்பரில் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.3 கோடியாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ரூ.22 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.343 கோடியாக உயா்ந்துள்ளது.

இது, கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் ரூ.312 கோடியாக இருந்தது. வட்டி வருவாய் ரூ.276 கோடியிலிருந்து ரூ.308 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய 2022 டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி 5.83 சதவீதமாக இருந்த வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி 4.81 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நிகர வாராக் கடன் விகிதம் 1.82 சதவீதத்திலிருந்து 1.27 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.