செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சதுரங்கப்பட்டினம் காவல் நிலைய தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம், மாமல்லன் நகரைச் சோ்ந்தவா் தணிகைவேல் (44). இவா் செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். சதுரங்கப்பட்டினத்தில் இருந்து மாமல்லபுரத்தை நோக்கி ஞாயிற்றுக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி அருகே வந்தபோது அவரது இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டுச் சென்றது. இதில், பலத்த காயமடைத்த அவரை அப்பகுதியினா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில், மருத்துவமனையில் தணிகைவேல் திங்கள்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
இவ்விபத்து தொடா்பாக மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் வடிவேல் முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சா் துரைமுருகன் மசூதிகளில் வாக்கு சேகரிப்பு

ஏழுமலையான் தரிசனம்: 8 மணிநேரம் காத்திருப்பு
பைக்கில் கொண்டுவந்த ரூ.52,500 பறிமுதல்

வாக்கு சேகரித்த தேமுதிக எம்.பி.யிடம் ரயில் பயணிகள் கோரிக்கை மனு அளிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


